MARC காட்சி

Back
சங்கர நாராயணன்
000 : nam a22 7a 4500
008 : 170508b ii 000 0 tam d
245 : _ _ |a சங்கர நாராயணன்
300 : _ _ |a சைவம்
340 : _ _ |a கருங்கல்
500 : _ _ |a சைவமும் வைணமும் ஒன்றிணைந்த திருக்கோலம்
510 : _ _ |a
  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
520 : _ _ |a பல்வேறு புராண சம்பவங்கள் ஹரியும், சிவனும் ஒன்றே என்று நமக்கு உணர்த்துகின்றன. திருமாலின் இருதய மத்தியில் என்றும் நீங்காமல் சிவன் இருக்கிறார் என்று தைத்திரிய ஆரண்யம் என்ற நூல் கூறுகிறது. சிவபெருமான்  கைலாயத்தில் எப்போதும் ராமநாமாவை சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்று விஷ்ணு சகஸ்ரநாமம் கூறுகிறது. திருமால் பத்து அவதாரங்கள் எடுத்தார். இந்த பத்து அவதாரங்களில் பெருமாள் சிவபிரானை பூஜித்ததற்கு பல சான்றுகள் உள்ளன. பிற்காலங்களில் ஹரியும் சிவனும் இணைந்த உருவம் சிற்பங்களில் காட்டப்படுகிறது. சிவ வடிவங்களில் ஒன்றாக சங்கர நாராயணன் உருவம் கருதப்படுகிறது. மாலொருபாகன் சைவ - வைணவ நெறிகளுக்கிடையிலான ஒற்றுமைக்கு சான்றாகின்றது. சிவனின் இவ்வடிவம் "சங்கர நாராயணன்" , "கேசவார்த்த மூர்த்தம்" "அரியர்த்த மூர்த்தம்" என்றெல்லாம் அழைப்பதுண்டு.வலது பாதி சிவனாகவும், இடது பாதி திருமாலாகவும் காட்டப்பட்டுள்ளனர். வலப்புறம் சிவனின் அம்சங்களும் இடப்புறம் திருமாலின் அம்சங்களும் இத்திருமேனியில் காணப்படும். வலப்புறம் வெண்ணிறம், வெண்ணிலா, வெண்ணீறு, உருத்திராக்கம், அஞ்சேல், மான் ஏந்திய கரங்கள் என்பன அலங்கரிக்க, இடப்புறம் கார்வண்ணம், மஞ்சளாடை, நகைகள், சங்கமும் கதையும் தாங்கிய திருக்கரங்கள் எனக் காணப்படும். வலது பாதியில் சிவனுக்குரிய சடை மகுடம், கையில் மழு, இடையில் அரையாடை (தோலாடை) ஆகியனவும், இடது பாதியில கிரீட மகுடம், காதில் மகர குண்டலம், நீண்ட பட்டாடை, கையில் சங்கு ஆகியனவும் இடம் பெற்றுள்ளன. பீடத்தின் மீது சமபாதத்தில் சங்கர நாராயணர் நின்றுள்ளார். தலைக்கு மேல் குடை காட்டப்பட்டுள்ளது. சிவனின் வலது முன் கை அபய (காக்கும்) முத்திரை காட்டுகிறது. திருமாலின் இடது முன் கை தொடையில் ஊரு முத்திரையாக அமைந்துள்ளது. இருபுறமும் இடைக்கட்டின் முடிச்சுகள் நீண்டு கணுக்கால் வரை தொங்குகின்றன. அணிகலன்கள் உடலின் இரு பாதியிலும் அவரவர்க்குரியதாக காட்டப்பட்டுள்ளன.
653 : _ _ |a சங்கர நாராயணன், ஹரிஹரன், மாலொரு பாகர், அரியர்த்தர், கேசவார்த்த மூர்த்தி, சிவவிஷ்ணு, ஹரியும் சிவனும், கொடும்பாளுர் மூவர் கோயில், புதுக்கோட்டை, பூதி விக்கிரமகேசரி, இருக்குவேள், இருக்குவேளிர், இருக்குவேளிர் கோயில் சிவ வடிவங்கள், சிவன் சிற்பங்கள், சிவன் சிலைகள்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
752 : _ _ |a தஞ்சை பெருவுடையார் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தஞ்சாவூர் |d தஞ்சாவூர் |f தஞ்சாவூர்
905 : _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன்
914 : _ _ |a 10.7831901
915 : _ _ |a 79.13123578
995 : _ _ |a TVA_SCL_000374
barcode : TVA_SCL_000374
book category : கற்சிற்பங்கள்
Primary File :

TVA_SCL_000374_தஞ்சை-பெருவுடையார்-கோயில்_சங்கர-நாராயணன்-001.jpg